என் மலர்
திருவாரூர்
+2
- காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது.
- குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடுகளில் ஒன்றாகும். இந்த காடு சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து கடலோர கிராமங்களை பாதுகாக்கும் இயற்கை அரணாக விளங்குகிறது. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.
முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரத்து 20 எக்டேர் பரப்பளவில் அலையாத்திக்காடு காணப்படுகிறது. திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களிலும் இந்த காடு பரவி உள்ளது.
காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தின் மேற்கு பகுதியில் தொடங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை கிழக்கு பகுதி வரை இந்த அலையாத்திக்காடு நீண்டுள்ளது.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டுக்குள் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடலாம். அதற்கேற்ற வகையில் மரப்பலகையால் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காடுகளை உயரே இருந்து பார்க்க வசதியாக உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் என இயற்கையை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வசதிகள் இங்கு உள்ளன. வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
அலையாத்திக்காட்டுக்குள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரம் பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும்.

குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம். இந்த அலையாத்திக்காட்டை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படகுதுறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் பிரமாண்டமான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் வருகை தருகின்றன. இங்கு இனப்பெருக்கம் செய்வதை அந்த பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. அதற்கேற்ற சூழல் இங்கு நிலவுவதாக பறவை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தற்போது கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான்.
- எங்களை பொறுத்தவரை தி.மு.க. எங்களுக்கு சிறந்த தோழமை கட்சி.
திருவாரூர்:
திருவாரூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படாத ஒரு கல் தூணில், இந்த ஆண்டு தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுவதை தேர்தலுக்காக சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தெய்வபக்தியும், மத உணர்வும் அவ்வளவு தான். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யவில்லை. தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்பவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும். அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான். இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகளும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
எங்களை பொறுத்தவரை தி.மு.க. எங்களுக்கு சிறந்த தோழமை கட்சி. நாங்கள் அவர்களிடம் பேரம் பேச தேவையில்லை. சிறந்த ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விரும்புகிறார்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க. விளிம்பு நிலைக்கு சென்று விட்டது. தமிழகத்தின் உரிமையை பற்றி அவர்களால் பேச முடியவில்லை. அமித்ஷா என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கின்றார்.
ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்கிறார். கூட்டணியை பொறுத்தவரை எங்களை போன்ற தெளிவு அவர்களிடம் இல்லை என்றார்.
- திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.
- 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.
இந்நியைலில், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
- டிட்வா புயல் நெருங்குவதால் அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
டிட்வா புயல் நெருங்குவதால் அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் பருவமழை சற்று இடைவெளியைக் கொடுத்தது. தற்போது மீண்டும் வடகிழக்கு பருவகாற்று முழுவதுமாக தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்காலிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற அம்மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை வருவாய், கூட்டுறவு, பொதுப்பணி, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளின் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்ற வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
- மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது.
- காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொயழுந்துவிட்டு எரிந்தது. இதில், விபத்தில் சிக்கிய கார் ஓட்டுனர் உடல் கருகி உயிரிழந்தார்.
விபத்தில், கார் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரில் இருந்து உடல் கருகிய நிலையில் ஓட்டுனரின் உடலை மீட்டனர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருத்துறைப்பூண்டி போலீசார், காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு கட்டத்தில் இருவரும் கரைக்கு திரும்பாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர்.
- பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக முன்பு திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் உள்ள விநாயகர் கோவில் குளத்தின் ஓரம் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரவீன்குமார் ஒரு கட்டத்தில் அங்குள்ள குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட காதலியும், பிரவீன்குமாரை காப்பாற்றுவதற்காக சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரும் கரைக்கு திரும்பாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்ற அபயக்குரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குளத்தில் பார்த்துள்ளனர். அங்கு இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர். உடனடியாக அவர்கள் கிணற்றில் குதித்து இருவரையும் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது காதலி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரவீன்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பிரவீன்குமாரின் குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் காதலர்கள் குளத்தில் குதித்ததில் காதலன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- கனமழை காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
- தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் 40 நாட்களே ஆன இளம் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூர்:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
திருவாரூர் நகரத்துக்குட்பட்ட அழகிரி காலனி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கனமழை காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வீட்டுக்குள் புகுந்த மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வந்துள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் வாளிகளை கொண்டு அகற்றி வருகின்றனர்.
மேலும் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் பழுதாகி விட்டன. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், பருவமழை காலங்களில் இது போல் பலமுறை மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நாங்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இந்த முறையும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது அதிகாரிகள் வீடுகளுக்குள் மழைநீர் புகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை நீரை வடிய வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தொடர் மழையால் நன்னிலம், பூந்தோட்டம், முடிகொண்டான், கொல்லுமாங்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 40 நாட்களே ஆன இளம் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவிட்டு சாகுபடி செய்துள்ள நிலையில் வயலில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுக தொடங்கி விட்டன. இந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
எனவே உடனடியாக வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்திற்கு நேரடியாக சென்று மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுத்துறை கன்னி கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் என்பவரது தொகுப்பு வீடு தொடர் மழை காரணமாக நேற்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த தாமஸ்சின் மகள் சுவேதா (வயது 15), மகன் சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவரும் காயம் அடை ந்தனர். இதில் சுவேதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே விழுதியூர் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கனமழை காரணமாக குடியிருப்புகளை சுற்றி மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி கிடக்கிறது. கழிவுநீரும் கலந்துள்ளதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், விஷ பூச்சிகள், பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
மேலும் பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதாக வேதனையுடன் கூறினர். மேலும் மழையினால் இங்கு 2 குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் வயலில் பயிர்கள் சாய்ந்து விட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கடன் வாங்கி பயிர் செய்த நெல் அறுவடை செய்ய முடியாமல் போனதால் கண்ணீரில் தவிக்கின்றனர். எனவே தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
- ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின
- விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.
மன்னார்குடி:
மேட்டூர் அணை இந்த ஆண்டு (2025) வழக்கம் போல் ஜூன் மாதம் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டது.
இதனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். சாகுபடியும் அமோக விளைச்சலை தந்தது, அறுவடை நேரத்தில் மழையும் ஒத்துழைப்பு நல்கியது. விவசாயிகள் அனைவரும் குறித்த நேரத்தில் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து விட்டனர்.
சிறு, குறு விவசாயிகள் மழை வருவதற்கு முன்னதாக அறுவடை செய்தாலும், அந்த நெல்லை விற்பதற்கு வழி இல்லாமல் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.
அறுவடைக்கு முன்பு மழையில் இருந்து தப்பித்த விவசாயிகள், தற்போது அறுவடை முடிந்து விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்ட நெல்லும், மூட்டைக்கட்டி அடுக்கி வைக்கப்பட்ட நெல்லும் மழையில் நனைந்து வீணாகிறது.

இதேபோல், ஓவேல்குடி கிராமத்தில் குவியல் குவியலாக தேங்கிக்கிடந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கின. இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
தீபாவளி நேரத்தில் புத்தாடை வாங்க பணம் கிடைக்கும் என்று நினைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு மாறாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது. நெல் கொள்முதலுக்கு ஏன் இவ்வளவு தாமதம் எனக்கேட்டால் இதுவரை 12 ஆயிரம் நெல்மூட்டைகள் பிடித்திருக்கிறோம். ஆனால், 7 ஆயிரம் நெல் மூட்டைகளை தான் குடோன்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மீதமுள்ள 5 ஆயிரம் நெல் மூட்டைகளும் அப்படியே கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி கிடக்கிறது என்கிறார்கள். அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி விவசாயிகள் தான்.
கோட்டூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 4 லட்சம் நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் கோட்டூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை லாரிகளை அனுப்பி ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி நெல்லை விரைவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.
- சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று இரண்டாம் கட்ட பிரசாரமாக நாகையை தொடர்ந்து, திருவாரூரில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்," தமிழக வெற்றிக் கழகத்தில் பொய் வாக்குறுதிக்கு இடமில்லை" என்றார்.
மேலும், விஜய் பேசியதாவது:-
கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லை ஏற்றி இறக்க ரூ.40 கமிஷன் வாங்குவதாக திருவாரூர் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.
கமிஷன் விவகாரத்தை வேறு யாரும் சொல்லியிருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன், இதனை கூறியதே விவசாயிகள் தான்.
உங்களுக்கு வேண்டுமென்றால் 40-க்கு 40 என்றால் வெற்றி, டெல்டா விவசாயிகளுக்கு நீங்கள் வயிற்றில் அடித்த ரூ.40 கமிஷன் தான்.
விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.
டெல்டா பகுதியில் 40-க்கு 40 என்பது விவசாயிகளின் வயிற்றில் அடித்து பெற்ற கமிஷன், இதற்கு சிஎம் சாரின் பதில் என்ன?
எது நடைமுறைக்கு சாத்தியமோ எதை உண்மையாக செய்ய முடியுமோ அதைதான் வாக்குறுதியாக தவெக தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள்.
- அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர்.
திருவாரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
கேள்வி கேட்கிறான் என்று நினைக்கிறாதீர்கள். தீர்வை நோக்கி போவதுதான் தவெக-வின் லட்சியம். தேர்தல் அறிக்கையில் அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுப்போம். பொய்யான தேர்தல் அறிக்கைய கொடுக்கமாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதை மட்டுமே சொல்வோம். எது உண்மையோ அதை மட்டுமே சொல்வோம். செய்வோம்.
ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்கள் ஆட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி இதுதான் த.வெ.க.வின் மிஷன்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள். அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர். இது என்ன சும்மா கூட்டமா? தொண்டர்கள் TVK TVK என கரகோஷம் எழுப்ப கோடான கோடி நன்றிகள் எனத் தெரிவித்தார்.
- உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்னு உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும்.
- மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, விஜய் பேசியதாவது:-
இந்த மாவட்டத்தில் மந்திரி ஒருவர் இருக்கிறார். அவருடைய வேலை என்னத் தெரியுமா?. முதலமைச்சர் குடும்பத்திற்கு வேலை செய்வது. அதுதான் அவருடைய வேலை. மக்கள்தான் முக்கியம் என அவருக்கு புரிய வைக்க வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும். மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே. இதை நான் சொல்லல. வார பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. அதான் நான் திரும்ப சொல்கிறேன்.
இவ்வாறு விஜய் பேசினார்.






