செய்திகள்

அமெரிக்காவில் பிறந்ததால் மட்டுமே இனி குடியுரிமை இல்லை - அதிபர் ட்ரம்ப்

Published On 2018-10-30 21:52 GMT   |   Update On 2018-10-30 21:52 GMT
அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். #Trump
வாஷிங்டன்:

அமெரிக்காவில் பிறக்கும் எல்லா குழந்தைகளும் குடியுரிமை பெறுவதற்கு அந்நாட்டின் 14–வது அரசியல் சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை பெறுவதற்கான அதிகாரத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில், 6-ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெறும் நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதை தெரிவித்துள்ளார். இதற்கு என சிறப்பு சட்டம் இயற்ற இருப்பதாகவும், அதற்காக வெள்ளை மாளிகை வக்கீல்கள் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், அமெரிக்கர் அல்லாதவர்கள் அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது உலகிலேயே அமெரிக்காவில் மட்டுமே இருக்கும் நிலை எனவும் இதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #Trump
Tags:    

Similar News