செய்திகள்

இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் மாயம்- தேடும் பணி தீவிரம்

Published On 2018-10-29 02:46 GMT   |   Update On 2018-10-29 05:40 GMT
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. #LionAirFlight #PlaneMissing
ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை, பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. காலை 6.33 மணியளவில் விமானம் கட்டுப்பட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேடும் பணியை தொடங்கி உள்ளனர். விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. #LionAirFlight #PlaneMissing

Tags:    

Similar News