செய்திகள்

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் - இம்ரான் கான்

Published On 2018-08-23 16:09 GMT   |   Update On 2018-08-23 16:09 GMT
கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தேவைப்பட்டால் உதவி செய்ய தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். #ImranKhan #Pakistan #KeralaFlood
இஸ்லாமாபாத்:

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் அடைந்துள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்கிறேன். மேலும் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News