செய்திகள்

நேபாளத்தில் நடந்த வாகன விபத்தில் 7 வயது சிறுவன் உள்பட 6 இந்தியர்கள் உயிரிழப்பு

Published On 2018-07-03 13:22 GMT   |   Update On 2018-07-03 13:22 GMT
நேபாளத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஸ்வால்லன் கோஷி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal
காத்மாண்டு:

நேபாளத்தில் பேடாடர் மலைப்பகுதியில் இருந்து கோஷி பகுதி வழியாக வந்துகொண்டிருந்த இந்திய பதிவு எண் கொண்ட வாகனம் திடீரென்று ஓட்டுனரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த வாகனம் அருகில் இருந்த ஸ்வால்லோன் கோஷி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு சென்றனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வாகன ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal
Tags:    

Similar News