செய்திகள்

1949-ம் ஆண்டுக்கு பின்னர் லண்டன் நகரில் சுட்டெரித்த வெயில் - மக்கள் கடும் அவதி

Published On 2018-04-19 14:07 GMT   |   Update On 2018-04-19 14:07 GMT
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது. 1949-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவில் வெயில் சுட்டெரிப்பது இதுவே முதன் முறையாகும்.
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தற்போது கடும் வெயில் அடித்து வருகிறது. கோடைக்காலம் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று அதிகபட்சமாக மேற்கு லண்டன் பகுதியில் 27.9 செண்டிகிரேட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.

1949-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த அளவுக்கு வெயில் அடிப்பது இதுவே முதன்முறையாகும். குளிரில் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட லண்டன் வாசிகள் வெயிலின் தாக்கம் தாங்காமல் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். #TamilNews
Tags:    

Similar News