செய்திகள்
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவல் ரத்து
மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது காவலை ரத்து செய்து பஞ்சாப் மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.
லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து, ஹபீஸ் சயீத்தின் பெயர் தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
இதற்கு எதிராக லாகூர் உயர்நீதி மன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஹபீஸ் சயீதுக்கான வீட்டுக்காவலை நீட்டிக்க விரும்பவில்லை எனவும், அந்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.
இன்னும் மூன்று தினங்களில் அவரது வீட்டுக்காவல் முடிவடையும் நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவலை நீட்டிக்க மறுத்து விட்டது.
பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.
லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து, ஹபீஸ் சயீத்தின் பெயர் தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
இதற்கு எதிராக லாகூர் உயர்நீதி மன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஹபீஸ் சயீதுக்கான வீட்டுக்காவலை நீட்டிக்க விரும்பவில்லை எனவும், அந்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.
இன்னும் மூன்று தினங்களில் அவரது வீட்டுக்காவல் முடிவடையும் நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவலை நீட்டிக்க மறுத்து விட்டது.