search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹபீஸ் சயீத்"

    • 2008 மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு பாகிஸ்தானில் உள்ளார்.
    • முக்கிய வழக்கில் அவரை நாடு கடத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது.

    2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி திடீரென மும்பைக்குள் புகுந்த தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். பிரபல தாஜ் ஓட்டல் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டார். மத்திய அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் எனத் தெரியவந்தது.

    சயீத் பாகிஸ்தானில் இருந்து வருவதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. ஐ.நா. சபையில் இந்தியா ஆதாரத்துடன் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அவரை பாதுகாத்து வருகிறது.

    இந்த நிலையில்தான் ஹபீஸ் சயீத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொட்பானர் மும்தாஜ் ஜஹ்ரா பலோச் கூறுகையில் "இந்திய அதிகாரிகளிடம் இருந்து வேண்டுகோள் வந்துள்ளது. அதை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பண மோசடி வழக்கில் ஹபீஷ் சயீத்தை நாடு கடத்த வேண்டும் (இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்) என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான்- இந்தியா இடையே ஒப்படைப்பு தொடர்பான இருநாட்டு ஒப்பந்தம் இல்லை" என்றார்.

    இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வழக்கை எதிர்கொண்டு வரும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள என இந்திய வெளியுறவுத்தறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லஷ்கர்-இ-தொய்பா (Let) பயங்கரவாத குழுவின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தை ஐ.நா., தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி என அறிவித்தது.

    மும்பை தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் தொடங்கியுள்ள அரசியல் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. #HafizSaeed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

    இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் மில்லி முஸ்லிம் லீக் என்ற புதிய அரசியல் அமைப்பை ஆரம்பித்து வரும் 25-ம் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்தான்.

    அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதின் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இந்த முடிவுக்கு எதிராக ஹபீஸ் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

    எனினும், அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் என்னும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி தனது ஜமாஅத் உத் தாவா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்க ஹபீஸ் சயீத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    எஹ்சான் என்பவர் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நாற்காலியை சின்னமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×