என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வீட்டுக்காவல்
நீங்கள் தேடியது "வீட்டுக்காவல்"
பிரதமரை கொல்ல சதி செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #BhimaKoregaon #GautamNavlakha
புதுடெல்லி:
பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும் வக்கீலுமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோர் மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் செப்டம்பர் 5-ம் தேதி வரை வீட்டுக்காவலில் மட்டும் வைக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அரசு மற்றும் தொடர்புடைய விசாரணை அமைப்புகள் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #BhimaKoregaon #GautamNavlakha
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X