search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hafiz saeed"

    • 2008-ம் ஆண்டில் நடந்த மும்பை தாக்குதலில் 161 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஹபீஸ் சயீத் முக்கிய பங்காற்றினார்.
    • அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

    நியூயார்க்:

    லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்தார் என்ற குற்றத்திற்காக அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    2008-ம் ஆண்டில் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் 161 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இவர் முக்கிய பங்காற்றினார் என்ற குற்றச்சாட்டுக்காக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது.

    இதற்கிடையே, ஒரு குறிப்பிட்ட வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள தேவையான ஆதாரங்களுடன் அவரை நாடு கடத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு அவரை நாடு கடத்தவில்லை.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் திருத்தப்பட்ட பட்டியலின்படி, பிப்ரவரி 12, 2020 முதல் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் ஹபீஸ் சயீத் உள்ளார். 7 பயங்கரவாத செயலுக்கு நிதியுதவி செய்த குற்றங்களில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின் அவருக்கு 78 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தப் பட்டியலின் மாற்றங்களின் லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவன உறுப்பினரும், சயீத் கூட்டாளியுமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவியின் மரணத்தையும் கமிட்டி சரிசெய்துள்ளது. 2008 மும்பை தாக்குதலில் பயங்கரவாதிகளை தயார்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய புத்தாவி கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இறந்தார்.

    இவற்றுடன் சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நபர்கள் மற்றும் வணிகங்களின் பட்டியலை பாதுகாப்பு கவுன்சில் குழு சமீபத்தில் புதுப்பித்திருகிறது.

    • 2008 மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு பாகிஸ்தானில் உள்ளார்.
    • முக்கிய வழக்கில் அவரை நாடு கடத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது.

    2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி திடீரென மும்பைக்குள் புகுந்த தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். பிரபல தாஜ் ஓட்டல் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டார். மத்திய அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் எனத் தெரியவந்தது.

    சயீத் பாகிஸ்தானில் இருந்து வருவதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. ஐ.நா. சபையில் இந்தியா ஆதாரத்துடன் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அவரை பாதுகாத்து வருகிறது.

    இந்த நிலையில்தான் ஹபீஸ் சயீத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொட்பானர் மும்தாஜ் ஜஹ்ரா பலோச் கூறுகையில் "இந்திய அதிகாரிகளிடம் இருந்து வேண்டுகோள் வந்துள்ளது. அதை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பண மோசடி வழக்கில் ஹபீஷ் சயீத்தை நாடு கடத்த வேண்டும் (இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்) என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான்- இந்தியா இடையே ஒப்படைப்பு தொடர்பான இருநாட்டு ஒப்பந்தம் இல்லை" என்றார்.

    இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வழக்கை எதிர்கொண்டு வரும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள என இந்திய வெளியுறவுத்தறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லஷ்கர்-இ-தொய்பா (Let) பயங்கரவாத குழுவின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தை ஐ.நா., தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி என அறிவித்தது.

    இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டி தந்ததாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத், சையத் சலாஹுதீன் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை கோர்ட் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. #Nonbailablewarrants #HafizSaeed #SyedSalahuddin
    புதுடெல்லி:

    இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி அளிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது என்.ஐ.ஏ. எனப்பட்டும் தேசிய புலனாய்வு முகமை கடந்த 30-5-2017 அன்று வழக்குப்பதிவு செய்தது.

    இதைதொடர்ந்து, காஷ்மீர், அரியானா, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 60 இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சுமார் 300 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

    இதன்மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டம் 121-ன்கீழ் 12,794 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை  தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்தியாவில் உள்ள பிரிவினைவாத சக்திகளுக்கு நிதி திரட்டித்தந்து இங்கு பயங்கரவாத தாக்குதல்களை ஊக்குவித்ததாக பாகிஸ்தானில் இருக்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன் உள்பட 12 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இவர்களை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்குமாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வலியுறுத்தியதற்கு இணங்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத், சையத் சலாஹுதீன் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விடுவிக்க முடியாத கைது உத்தரவு பிறப்பித்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். #Nonbailablewarrants #HafizSaeed #SyedSalahuddin
    மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையது ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாகிஸ்தான் மந்திரி கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #HafizSaeed #MumbaiAttack
    இஸ்லாமாபாத் :

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்து வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சட்டி வருகிறது. குறிப்பாக மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்படுபவர் பயங்கரவாதி ஹபீஸ் சையத். இவர் 'ஜமாஅத் உத் தவா' என்னும் பெயரில் அமைப்பு நடத்தி வருகிறார்.

    ஒருபுறம் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு,  மறுபுறம் பயங்கரவாதிகளுடன் கைகோர்ப்பு என பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டு வருகிறது.

    இதற்கு  உதாரணமாக  இஸ்லாமாபாத்தில் பயங்கரவாதி ஹபீஸ் சயீது  தலைமையில் கூட்டம் ஒன்று நடந்து உள்ளது.  இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில், பாகிஸ்தான்  பாதுகாப்பு, காஷ்மீர், இந்தியாவின் மிரட்டல்கள் குறித்த ஆலோசனை கூட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    பயங்கரவாதி  தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் மத விவகாரங்கள் மற்றும் மத நல்லிணக்க துறை அமைச்சர் நூர் உல் ஹக் குதாரி கலந்து கொண்டார்.

    தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அமைதி பேச்சு வார்த்தைக்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான், பயங்கரவாதி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு தனது அமைச்சரை அனுப்பி உள்ளதற்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன. #HafizSaeed #MumbaiAttack
    பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கான தேர்தலில் பயங்கரவாதி ஹபீஸ் சயீதியின் மகன் ஹபீஸ் தல்கா சயீத் மற்றும் மருமகன் ஹபீஸ் சாலித் வாலீத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #HafizSaeed #GeneralElections2018
    லாகூர்:

    பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜமாத்-உத்தலா தீவிரவாத அமைப்பு போட்டியிடுகிறது.

    அக்கட்சி மல்பி முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியை தொடங்கி பாகிஸ்தான் தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்தது. ஆனால் அதற்கு உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் தரவில்லை.

    எனவே அல்லா-வு-அக்பர் தெக்ரிக் என்ற பதிவு செய்த அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜமத்- உத்-தவா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அல்லா-வு-அக்பர் தெக்ரிக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    மொத்தம் 265 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர். அவர்களில் 80 பேர் பாராளுமன்றத்துக்கும் 185 பேர் சட்டமன்றத்துக்கும் போட்டியிட மனுதாக்கல் செய்தனர். இவர்களில் தீவிரவாத ஹபீஸ் சயீதியின் மகன் ஹபீஸ் தல்கா சயீத் மற்றும் மருமகன் ஹபீஸ் சாலித் வாலீத் ஆகியோரும் முக்கியமானவர்கள்.

    ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நாங்கள் போட்டியிடவில்லை. லஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும். பாகிஸ்தானின் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும். இஸ்லாமின் கோட்டையாக பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என தேர்தல் போட்டியிடுகிறோம் என்றனர். இவர்களின் மனு தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சயீத்தின் மகன் தல்ஹா சர்கோடா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இது ஹபீஸ் சயீத்தின் சொந்த நகரமாகும். மருமகன் ஹாலித் வாலீத் லாகூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு நாற்காலி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தீவிரவாதி சயீத் மும்பை தாக்குதலில் முறையாக செயல்பட்டவன். அவன் தலைக்கு அமெரிக்க அரசு ரூ.6½ கோடி பரிசு அறிவித்துள்ளது. #HafizSaeed #GeneralElections2018
    மும்பை தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் தொடங்கியுள்ள அரசியல் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. #HafizSaeed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

    இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் மில்லி முஸ்லிம் லீக் என்ற புதிய அரசியல் அமைப்பை ஆரம்பித்து வரும் 25-ம் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்தான்.

    அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதின் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இந்த முடிவுக்கு எதிராக ஹபீஸ் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

    எனினும், அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் என்னும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி தனது ஜமாஅத் உத் தாவா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்க ஹபீஸ் சயீத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    எஹ்சான் என்பவர் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நாற்காலியை சின்னமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    மும்பை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் அடுத்த மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளான். #HafizSaeed
    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

    இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன்  புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளான்.

    அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதின் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இந்த முடிவுக்கு எதிராக ஹபீஸ் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் என்னும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி தனது ஜமாஅத் உத் தாவா வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்க ஹபீஸ் சயீத் தீர்மானித்துள்ளான்.

    ஜமாஅத் உத் தாவா அமைப்பின் அரசியல் முகமாக பார்க்கப்படும் மில்லி முஸ்லீம் லீக் கட்சியை அந்நாட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக ஜமாஅத் உத் தாவா அமைப்பினர் போட்டியிடும் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சிக்கு அவர்கள் ஆதரவளிக்க உள்ளனர்.

    எஹ்சன் என்பவர் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நாற்காலியை சின்னமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய பாகிஸ்தானிடம் சீன அதிபர் கூறியதாக வெளியான தகவலை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
    பீஜிங்:

    மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத்தவா இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருகிறார். அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட இவர் அரசியல் கட்சி ஒன்று தொடங்கியுள்ளார்.

    இவரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது, பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாக கூறி அமெரிக்கா அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை நிறுத்தி வைத்தது. இதனால், ஹபீஸ் சயீது பாகிஸ்தானுக்கு தலைவலியாக இருந்து வருகிறார்.

    கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங், ஹபீஸ் சயீதை மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில், மேற்கண்ட செய்தியை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்ற செய்தி என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
    ×