செய்திகள்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தான்: ராணுவ சாவடி மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் - 9 பேர் பலி

Published On 2017-10-25 11:30 GMT   |   Update On 2017-10-25 11:30 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ சாவடி மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஃபரா மாகாணத்திற்குட்பட்ட புஷ்ட் ரோடு மாவட்டத்தில் உள்ள ராணுவ சோதனை சாவடியின் மீது நேற்றிரவு வெடி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த ராணுவ வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

சுமார் 4 மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டைக்கு முடிவுகட்ட அந்த இடத்துக்கு ராணுவ விமானங்கள் விரைந்துவந்து தாக்குதல் நடத்தின. இருதரப்பு மோதலில் ராணுவத்தை சேர்ந்த 9 பேர் பலியானதாகவும், 4 வீரர்கள் காயமடைந்ததாகவும் ஃபரா மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் முஹம்மது நாசர் மெஹ்ரி தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்

தாக்குதல் நடத்தவந்த 17 தலிபான் தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News