செய்திகள்

பாகிஸ்தானில் 25 இந்திய மீனவர்கள் கைது

Published On 2017-10-18 14:22 GMT   |   Update On 2017-10-18 14:22 GMT
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 25 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 25 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 25 இந்திய மீனவர்களை கடந்த 96 மணி நேரத்தில் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களுக்கு சொந்தமான 4 படகுகள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டின் கடலோரக் காவல் படை அதிகாரி பர்ஹட் கான் இன்று தெரிவித்துள்ளார்.

இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை சுமார் 350 ஆக உயர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News