செய்திகள்

4 தென் கொரிய பத்திரிகையாளர்களுக்கு மரண தண்டனை: வடகொரியா உத்தரவு

Published On 2017-09-01 08:39 GMT   |   Update On 2017-09-01 08:39 GMT
அவதூறு செய்தி வெளியிட்டதாக 4 தென் கொரிய பத்திரிகையாளர்களுக்கு மரண தண்டனை விதித்து வடகொரியா உத்தரவிட்டுள்ளது.
டியோல்:

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. அது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. தற்போது வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

சமீபத்தில் வடகொரியா புத்தகம் வெளியிட்டது. தென்கொரியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் 4 பேர் இந்த புத்தகத்துக்கு மதிப்புரை எழுதினார்கள்.



அதில் வடகொரியா குறித்து அவதூறாக எழுதி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

எனவே புத்தகத்துக்கு மதிப்புரை எழுதிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து வடகொரியா உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News