செய்திகள்

ஜப்பான்: ஓகினாவா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம்

Published On 2017-07-26 11:40 GMT   |   Update On 2017-07-26 11:40 GMT
ஜப்பான் நாட்டின் ஓகினாவா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகுகளாக கணக்கிட்டப்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ:

பசிபில் பெருங்கடல் ஓரத்தில் உள்ள ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான ஓகினாவா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஓகினாவா நகரில் இருந்து கிழக்கே சுமார் 267 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகுகளாக கணக்கிட்டப்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
Tags:    

Similar News