செய்திகள்

சந்திரபாபு நாயுடு இலங்கை சென்றார்: அதிபர் சிறிசேனாவுடன் சந்திப்பு

Published On 2017-01-08 07:05 GMT   |   Update On 2017-01-08 07:05 GMT
இலங்கை சென்ற ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அந்நாட்டு அதிபர் சிறிசேனாவை சந்தித்தார்.
கொழும்பு:

மைத்ரிபால சிறிசேனா இலங்கை அதிபராக பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அதையொட்டி விழா நடைபெறுகிறது.

அதில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இலங்கை சென்றுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி மாளிகை சென்ற அவர் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்து பேசினார்.

அப்போது சந்திரபாபு நாயுடு ஆட்சியின் கீழ் ஆந்திர மாநிலம் வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு போன்றவற்றில் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து அதிபர் சிறிசேனா தனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் ஆந்திர மாநிலத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் புகழாரம் செய்தார்.

இதற்கிடையே இன்று நடைபெற உள்ள விழாவில் பங்கேற்கும் சந்திரபாபு நாயுடு சிறப்புரை ஆற்றுகிறார்.

Similar News