தமிழ்நாடு

பாரிமுனையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை- ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

Published On 2023-01-24 07:10 GMT   |   Update On 2023-01-24 10:57 GMT
  • தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சென்னையில் பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை:

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

240 நாட்கள் பணி புரிந்தால் பணிநிரந்தரம், ரூ.21 ஆயிரத்திற்கு குறையாத மாத ஊதியம், நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6000-க்கு குறையாத ஓய்வூதியம், நல வாரிய நிதி பயன்களை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

சென்னையில் பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடத்த தொழிலாளர்கள் குறளகம் அருகில் திரண்டனர்.

மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

ஆனால் அவர்கள் பேரணியாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News