search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் போராட்டம்"

    • அதிக தொழிலாளர்களை கொண்ட அரசு நிறுவனமாக அரசு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது.
    • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எவ்வித பணப் பலனும் 13 மாதமாக வழங்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என 1.35 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    அதிக தொழிலாளர்களை கொண்ட அரசு நிறுவனமாக அரசு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அக விலைப்படி வழங்காமல் இருப்பதால் அதனை உடனே வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    இது தவிர பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எவ்வித பணப் பலனும் 13 மாதமாக வழங்கப்படவில்லை அதனை வழங்க வேண்டும், 4 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

    அரசு செவி சாய்க்காததால் கடந்த 19-ந் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின.

    இதையடுத்து பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தவிர்க்க அமைச்சர் சிவசங்கர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த 5-ந்தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அகவிலைப்படி உயர்வு வழங்குதல், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

    இது தொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் (9-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதனை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தது.

    அதனை தொடர்ந்து இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்றைய பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் திட்டமிட்டபடி நாளை (9-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்னன.

    போராட்டம் காரணமாக 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.

    பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. 

    அதன் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மதியம் பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.
    • ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தொழிலாளர் நல கமிஷனர் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்துடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

    இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஆலோசனை முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
    • வரும் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.

    பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த நிலையில் 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகங்களில் மொத்தம் சுமார் 1,20,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் தொ.மு.ச. தவிர்த்து மற்ற பிற தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், பொங்கலுக்கு முன்பு எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் 9-ந்தேதி ஸ்டிரைக்கை திரும்ப பெறும் எண்ணம் இல்லை. நாங்கள் முறையான ஸ்டிரைக் நோட்டீசு வழங்கி விட்டோம். 4-ந்தேதியே அந்த கெடு முடிந்துவிட்டது. இருந்தாலும் 5 நாள் 'டயம்' கொடுத்து 9-ந்தேதி தான் வேலைநிறுத்தம் நடத்த இருக்கிறோம்.

    எனவே பொங்கல் சிறப்பு பஸ்களை இயக்குவது பாதிக்கப்படக்கூடாது என கருதும் தமிழக அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பிரச்சனைகளை பேசி தீர்க்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது.
    • பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடியில் உள்ள வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதை கண்டித்து கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிவசங்கர் எம்.எல்.ஏ. போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    கடலூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்பட 33 பேர் நேரில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்டில் ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

    பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் பேட்டி அளித்ததாவது:-

    அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் குன்னம் தொகுதியில் சுடுகாடு பகுதியில் அத்துமீறி மணல் அள்ளியதால் அனைத்து கட்சி சார்பிலும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்படும்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையாக நிறைவேற்றி உள்ளோம். இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது. தற்போது நிதி நிலைமை அனைவருக்கும் தெரியும். மேலும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிதி நிலைமையிலும் முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வருகிறார்.

    ஆனால் மத்திய அரசு நம்மிடம் இருந்து நிதியை வசூல் செய்து வரும் நிலையில் மீண்டும் நிதியை சரியான முறையில் தருவதில்லை. ஆனால் பல்வேறு வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு நிறைவேற்றி வருகிறார்.

    போக்குவரத்து துறை முதலமைச்சர் வழங்கும் நிதியால் தான் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படுகிறது. இது மட்டுமின்றி மகளிர் கட்டணம் இல்லா பயணம், மாணவர்களின் கட்டணமில்லா பயணம், டீசல் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்திற்கு முதலமைச்சர் நிதி வழங்கி வருவதால் போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் மாதம் முதல் தேதியில் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எத்தனை மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்குகிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சீரழிந்து வந்த துறையை முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    மேலும் போக்குவரத்து துறை என்பது மக்களுக்கு சேவையாற்றும் துறையாக செயல்பட்டு வருகின்றது. மேலும் டீசல் விலை உயர்ந்த நிலையிலும் ஏழை மக்கள் பாதிப்படையாத வகையில் கட்டணம் உயர்த்தவில்லை. பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். பொங்கலுக்கு பிறகு நான் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன் என அறிவிப்பு தெரிவித்த நிலையில் இந்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

    பொங்கலுக்கு பிறகு நாங்கள் பேச தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் நாங்கள் தயாராக உள்ளோம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொங்கலுக்குப் பிறகு முழுமையாக அனைத்து பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்கவில்லை. ஆனால் தற்போது போராட்டம் நடத்தி வரும் அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா? என தெரியவில்லை.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கேட்கப்படாத அகவிலைப்படியை தி.மு.க. ஆட்சியில் சேர்த்து வழங்க வேண்டும் என கூறுவது அரசியல் நோக்கமாகும். பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்தில் பொதுமக்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்லலாம். மேலும் தற்போது அறிவித்துள்ள போராட்டத்தில் குறைவான நபர்கள் தான் செல்வார்கள். ஆகையால் எந்த பிரச்சனையும் வராது. போக்குவரத்து தடை ஆகாது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • விரைவு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.
    • நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பலன்களை தர வேண்டும், வாரிசுதாரர்களுக்கு வேலை நியமனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதி தொழிற்சங்கங்கள் நோட்டீசு வழங்கி இருந்தது.

    இதையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் கடந்த மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    இதில் போக்குவரத்து கழகம் சார்பில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொழிற்சங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று ஒரே ஒரு கோரிக்கையை முதலில் நிறைவேற்றி தருமாறு தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினார்கள். ஆனால் அதற்கும் சரியான பதில் கிடைக்காததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இதனால் வருகிற 9-ந்தேதியில் இருந்து பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் ரெயிலில் டிக்கெட் கிடைக்காததால் பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' என்ற அறிவிப்பு பயணிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதைய சூழலில் பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலிக்கலாம் என்று சொல்லி இருந்தோம்.

    ஆனால் அதை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்து 9-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் என்று அறிவித்து உள்ளனர். இதை சுமூக நிலைக்கு கொண்டு வர தொழிற்சங்கங்களுடன் பேசி விட்டு உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். அதன்பிறகு அந்த விவரங்களை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

    கேள்வி:- தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தெளிவுப்படுத்தி விட்டார்கள். இனிமேல் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சமரசத்துக்கு வருவார்களா?

    பதில்: அ.தி.மு.க.வை சேர்ந்த தொழிற்சங்கம் வரமாட்டார்கள். தொ.மு.ச. சேர்ந்த தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசிப் பார்ப்போம்.

    கேள்வி: எந்த சமரசத்துக்கும் தொழிற்சங்கத்தின் வராவிட்டால் பஸ் ஸ்டிரைக் தொடங்கி விடுமே? இதனால் பொங்கலுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுமே? ஆயிரக்கணக்கான பயணிகள் விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளார்களே?

    பதில்: விரைவு பஸ்களில் எந்த பிரச்சனையும் இருக்காது. அந்த பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். தொழிற்சங்கத்தினர் அதை ஒன்றும் செய்ய இயலாது. முன்பதிவு செய்து உள்ள பயணிகள் தாராளமாக பயணிக்க முடியும்.

    ஆனால் மற்ற போக்குவரத்து கழகங்கள் சிலவற்றில் மட்டும் தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க வாய்ப்பு உண்டு. அதையும் நாம் சமாளிக்க முடியும். பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் என்ன செய்ய முடியுமோ அதை அரசு மேற்கொள்ளும்.

    நாங்கள் தொழிற்சங்கத்தின் கோரிக்கை எதையும் நிராகரிக்கவில்லை. பொங்கல் கழித்து பேச தயாராக இருக்கிறோம் என்றுதான் சொல்கிறோம்.

    கேள்வி: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 8 வருடமாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கவில்லை. அதை மட்டும் முதலில் நிறைவேற்றுங்கள் என்று கூறுகிறார்களே?

    பதில்: 8 வருடம் நிலுவை என்பது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 5 வருடம் நிலுவையை வைத்துவிட்டு சென்று விட்டார்கள். அந்த முழு சுமையையும் இப்போதைய நிதி நெருக்கடியில் தாங்க முடியாது. அதுதான் பிரச்சனை.

    போக்குவரத்து துறை மட்டுமல்ல மற்ற துறைகளில் உள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. இவை எல்லாம் சேரும்போது பெரிய நிதிப்பிரச்சனை வரும்.

    இவை அனைத்தையும் கணக்கெடுத்து விட்டு ஒரு பிளான் பண்ணி செய்வதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

    இந்த சூழலில் இது பொங்கல் நேரம் என்பதால் தொழிற்சங்கத்தினர் டிமாண்ட் வைக்கிறார்கள். கடந்த பேச்சுவார்த்தையின்போது அதிகபட்சமாக எல்லா கோரிக்கையும் முடித்து கொடுத்துள்ளோம்.

    சம்பள விகிதத்தை அ.தி.மு.க. ஆட்சியின்போது சீர்குலைத்து வைத்திருக்கிறார்கள். சீனியர், ஜூனியர் என்ற வித்தியாசம் இன்றி குளறுபடி இருந்தது. அதை நாங்கள் சரி செய்து கொடுத்து அதனால் மாதம் 40 கோடி கூடுதல் செலவானது. இதை நிதித்துறை ஒத்துக்கொள்ளவில்லை.

    ஆனால் முதலமைச்சர் அதை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று சொல்லி செய்து கொடுத்தார். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு திருப்திதான்.

    எந்த கோரிக்கையையும் நாங்கள் முடியாது என்று சொல்லவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிலுவையை வைத்துவிட்டு சென்றதால்தான் பார்த்து செய்கிறோம் என்று கூறுகிறோம்.

    எனவே இந்த விஷயத்தில் முதலமைச்சரிடம் கேட்டு விட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி முடிவெடுப்போம்.

    இப்போதைக்கு பொங்கலுக்கு சிறப்பு பஸ்கள் விட இருப்பது உள்பட பல வேலைகள் இருக்கிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்த பிறகு அதில் உள்ள சிரமங்களை சரி செய்யும் பணிகள் நிறைய உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 7, 8-ந்தேதிகளில் வருகிறது. சட்டமன்றம் விரைவில் கூட உள்ளதாக தெரிகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் இருப்பதால் தான் பொங்கல் கழித்து பேசிக்கொள்ளலாம் என்று சொல்கிறோம்.

    இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

    • கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது.
    • தொழிலளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுபவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்காமல், தொழிலாளர்களை நிர்கதியாக நிற்க வைத்தது. எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    மிக முக்கியமாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீரமைக்கப்பட்டு 'பே மேட்ரிஸ்' தனித்தனி ஊதிய விகிதம், 2.57 காரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படுகிறது. ஊதியமும் 5 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இது அத்தனையும் எந்த போராட்டமும் நடத்தாமல், எந்த ஒடுக்கு முறையையும் சந்திக்காமல் கிடைத்தவை.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது. மகளிர் கட்டண மில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2800 கோடி ஒதுக்கி, டீசல் மானியமாக ரூ.2 ஆயிரம் கோடியும், மாணவர் இலவச பஸ் பயணத்திற்காக ரூ.1,500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசாணை 36-ஐ பிறப்பித்து போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்மூலம் போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். புதிய பஸ்களை வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தீபாவளி போனஸ் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குறைத்து வழங்கப்பட்டதை யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 சதவீதமாக உயர்த்தி ரூ.16,800 வழங்கி உள்ளோம். இதற்கும் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. மக்கள் மனமறிந்து செயல்படுவது போலவே, தொழிலளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுபவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகளை நிறைவேற்றி உள்ளோம்.

    இப்போது சென்னையில் வரலாறு காணாத அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் பொதுமக்கள் சந்தித்துள்ள இழப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை கூட வழங்க முன்வராத நிலையில், முதலமைச்சர் நிவாரண தொகுப்பை அறிவித்து வருகிறார். முழு அரசு எந்திரமும் இந்த பணியில் ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவோம்.

    பேரிடர் காலத்தில் உடனடியாக களம் இறங்கி பஸ்களை வழக்கம்போல் இயக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் நம் போக்குவரத்து துறை தொழிலாளர்கள். அதேபோல தொழிற்சங்கங்களும் முதலமைச்சருக்கும், பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க அன்போடு வேண்டுகிறேன்.

    எனவே போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இதை உணர்ந்து கொண்டு பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், பொங்கல் விடுமுறைக்கு பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    எனவே போராட்டம் அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.
    • நாளை மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த டிசம்பர் 19-ந் தேதி தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியது.

    இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் ஜனவரி 3-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நாளை மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 23 தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    ஸ்டிரைக் நோட்டீஸ் 'காலக்கெடு' 4-ந்தேதியுடன் முடிவடையும் சூழலில் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட கலெக்டரிடம் உங்களது குறைகளை கூறியுள்ளோம்.

    மேலும் இன்னும் சில தினங்களில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய 3 மாத சம்பள பாக்கியினை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தல்
    • 2 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள சோலூர் ஊராட்சியில் தனியார் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தோல் தொழிற்சாலை மூடப்பட்டது.

    அப்போது பாதி பேருக்கு சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மென்ட் வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இது குறித்து பலமுறை தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பலமுறை நிலுவைத் தொகை வழங்க கோரியும், இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பூட்டி கிடந்த தோல் தொழிற்சாலையை கதவுகள் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மெண்ட் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தொழிற்சாலை இடம் மாற்றத்தை கண்டித்து நடந்தது
    • போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் தனியார் ஷூ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இதில் 600-க்கும் மேற்ற பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சம்பளம், நிலுவைத் தொகை மற்றும் தொழிற்சாலை இடம் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரம் போராட்டம் நடத்தியும் தொழிற் சாலை நிர்வாகம் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில், உமராபாத் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    இன்று வேலை நிறுத்தம் செய்ய போவதாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
    • 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுவதாக இருந்தது.

    சென்னை:

    தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது , காலி பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களையே நியமிக்க வேண்டும், பஸ்களை தனியார் மயமாக்ககூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருந்தது.

    இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை (9-ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த பேச்சுவார்த்தை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதில் அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்கங்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அன்றையதினம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? என்பது தெரியவரும்.

    ×