செய்திகள்
தற்கொலை

குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-01-23 10:05 GMT   |   Update On 2021-01-23 10:05 GMT
குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி சோனியா காந்தி நகரை சேர்ந்தவர் காத்தவராயன்(வயது 38). இவரது மனைவி பரமேஸ்வரி(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பரமேஸ்வரி திடீரென வீட்டு மின்விசிறியில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News