செய்திகள்
கோப்புபடம்

மதுகுடிக்க பணம்கேட்டு தாக்கிய தந்தையை வெட்டி கொன்ற மகன்

Published On 2020-04-04 09:08 GMT   |   Update On 2020-04-04 09:08 GMT
எண்ணூரில் மதுகுடிக்க பணம்கேட்டு தாக்கிய தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:

எண்ணூர், அன்னை சிவகாமி நகர், 4-வது தெருவில் வசித்து வந்தவர் நாகராஜ்(வயது45)லாரி டிரைவர். இவரது மனைவி தையல் நாயகி. இவர்களது மகன்கள் சேதுபதி, தமிழ்ச் செல்வன். இவர்களில் தமிழ்ச்செல்வன் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நாகராஜ் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாகராஜ் மனைவி தையல் நாயகியிடம் மேலும் மதுகுடிக்க பணம்கேட்டு அரிவாளை காட்டி மிரட்டினார்.

இதனை இளைய மகன் தமிழ்ச்செல்வன்தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மகன் என்றும் பாராமல் அரிவாளால் தமிழ்ச்செல்வன் கையில் வெட்டினார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க முயன்ற தையல் நாயகிக்கும் வெட்டு விழுந்தது. இதனைப்பார்த்த மூத்த மகன் சேதுபதி ஆத்திரமடைந்து தந்தை நாகராஜனிடம் மோதலில் ஈடுபட்டார். அப்போது அரிவாளை பிடுங்கி தந்தை நாகராஜை சராமரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தையடுத்து சேதுபதி எண்ணூர் போலீஸ நிலையத்தில் சரண் அடைந்தார் .அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகராஜ் கடந்த 2016-ம்ஆண்டு சொத்துக்காக தனது 80 வயது தாத்தாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தவர். தற்பொழுது நாகராஜ்மகனால் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

Tags:    

Similar News