செய்திகள்
பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்- பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

Published On 2020-02-28 10:15 GMT   |   Update On 2020-02-28 10:15 GMT
முக ஸ்டாலின் கனவு பலிக்காது, அதிமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அடுத்த ராசிசெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேர்வைக்காரன் பாளையத்தில் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று 259 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகளை வழங்கினார். சப்-கலெக்டர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார். தாசில்தார் தணிகைவேல் வரவேற்றார். அட்மா திட்டத்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், அ.தி.மு.க. நிர்வாகிகள் வீராசாமி, வக்கீல் தனசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது,

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் இஸ்லாமிய மக்களுக்கு பாதிப்பு இல்லை. பாதிப்பு இருப்பதாக திமுக கூறுவதால் பாதிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார். ஆனால், திமுக வெளிநடப்பு செய்தது. குடியுரிமை சட்ட திருத்தத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டிவிட்டு கட்சி வளர்ச்சிக்காகவும் சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டு வங்கியை பெற்று வெற்றிபெறவேண்டும் என்று ஆயத்தமாகி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மீதும் மக்கள் மீதும் எந்த அக்கறையும் இவர்களுக்கு இல்லை. ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற கனவு பலிக்காது, மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News