செய்திகள்
தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-02-03 06:29 GMT   |   Update On 2020-02-03 06:29 GMT
ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணை மேட்டுகண்டிகையை சேர்ந்தவர் வேல்முருகன் (49). கூலி தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லை.

இதனால் விரக்திஅடைந்த அவர் நேற்று வீட்டில்இருந்த வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

Similar News