செய்திகள்
திமுக

மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ந் தேதி அண்ணா நினைவுநாள் அமைதிப்பேரணி

Published On 2020-01-27 08:52 GMT   |   Update On 2020-01-27 08:52 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற பிப். 3-ந் தேதி நடைபெற உள்ள அண்ணா நினைவுநாள் அமைதிப்பேரணியில் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும் பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.



முன்னதாக அமைதிப்பேரணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.

இதில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த திரண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News