search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா நினைவு நாள்"

    • பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது.
    • தமிழகம் முழுவதும் அண்ணா சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.15 மணி அளவில் அண்ணாவின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவைதலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின், கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார், ரமணா, மா.பா.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, மாதவரம் மூர்த்தி, வி.என்.ரவி, ஆதிராஜாராம், கே.பிரபாகரன், தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணைச் செயலாளர் இ.சி.சேகர்,கொள்கைபரப்பு துணை செயலாளர் கலைப்புனிதன், வக்கீல் சதாசிவம், வக்கீல் அ.பழனி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, இஸ்மாயில் கனி மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.
    • தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவே உள்ளது.

    சென்னை:

    மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் மரியாதை செய்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்

    செல்வம், சசிகலா ஆகியோர் இன்று வருகை தந்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி விட்டு காரில் திரும்பியபோது எதிரே சசிகலா காரில் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ஓ.பி.எஸ். காரை நிறுத்திவிட்டு இறங்கினார். பின்னர் சசிகலாவின் காரை நோக்கி அவர் நடந்து சென்றார். இதனை பார்த்ததும் சசிகலாவும் தனது காரில் இருந்து இறங்கினார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இதன் பின்னர் அண்ணா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களிடம்

    கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான்ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். அதற்கான காலம் வரும் பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.

    மத்திய மந்திரியாக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் புரட்சித்தலைவரை பற்றி தவறாக விமர்சித்துள்ளார். அவருக்கு பல வரலாறுகள் தெரியாது. எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது கருணாநிதியும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார்கள். அப்போது நிறைய கடன் வாங்கி கஷ்டத்தில் இருப்பதாகவும் தங்களுக்காக எங்களது நிறுவனத்துக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படம் நடித்து தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    அதனை ஏற்று எம்.ஜி.ஆர். நடித்து கொடுத்த படம்தான் எங்கள் தங்கம். அந்த படத்தில் புரட்சி தலைவிதான் கதாநாயகியாக நடித்து இருந்தார். படத்தின் வெற்றி விழாவில் பேசிய முரசொலிமாறன், எம்.ஜி.ஆரை பார்த்து நீங்கள் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்ததால் தான் கடனை எல்லாம் அடைத்து கோபாலபுரம் வீட்டையும் அடமானத்தில் இருந்து மீட்டு விட்டோம் என்று பேசினார். இந்த வரலாறு கூட தெரியாமலேயே அவர் பேசியுள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது. தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவே உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் சசிகலாவிடம் ஓ.பி.எஸ்.சுடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்கள், இருவரும் பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த சசிகலா, ஓ.பி.எஸ். கட்சிக்காரர் மட்டுமல்ல எனது குடும்பத்திலும் ஒருவர். அ.தி.மு.க.வினர் ஒற்றுமையோடு இருந்து தீய சக்தி என்று அம்மா குறிப்பிட்ட தி.மு.க.வை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கும் வீழ்த்துவதற்கும் என்னென்ன வழிமுறைகளை யெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    சேலம்:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

    * தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடக காவிரி படுகையில் எதுவும் கட்ட முடியாது.

    * இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது அண்ணாவின் ஆசை.

    * அண்ணா நினைவு நாளில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வருமா என ஏங்கி கொண்டிருக்கிறோம்.

    * தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறினார்.

    • தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.
    • அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனியில் பேரறிஞர் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அந்த படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்.

    இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை -கண்ணியம்-கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்.

    எண்ணித் துணிக கருமம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர்.
    • மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர்.

    சென்னை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என, மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர், தான் தொடங்கிய கட்சியில் கூட, தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர்.

    திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாநில சுயாட்சிக்கான காரணங்கள் இன்னும் காலமாகிவிடவில்லை.
    • நிழல் விழுந்தால் பொருள் இருக்கிறது என்று பொருள்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இருமொழிக்கொள்கை

    இறந்துபடவில்லை

    மாநில சுயாட்சிக்கான

    காரணங்கள் இன்னும்

    காலமாகிவிடவில்லை

    பகுத்தறிவின் வேர்கள்

    பட்டுவிடவில்லை

    இனமானக் கோட்டை

    இற்றுவிடவில்லை

    சமூக நீதிக்கொள்கை

    அற்றுவிடவில்லை

    மதவாத எதிர்ப்பு

    மாண்டுவிடவில்லை

    எப்படி நீமட்டும்

    இறந்துபடுவாய் அண்ணா?

    நிழல் விழுந்தால்

    பொருள் இருக்கிறது

    என்று பொருள்

    லட்சியம் வாழ்ந்தால்

    அந்த மனிதன் வாழ்கிறான்

    என்று பொருள்

    இன்னும் நீ இருக்கிறாய்

    அண்ணா!

    எங்கள் கொள்கை வணக்கம்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.
    • எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.

    "எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம்முடைய எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக்க முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம் என கூறியுள்ளார்.

    • மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
    • தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்ணா சமாதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையொட்டி அண்ணா-எம்.ஜி.ஆர். நினைவிடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அண்ணாவின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்துக்குதான் மலர்தூவி அனைவரும் மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி தி.மு.க.வினர் அமைதி பேரணியாக சென்றனர்.

    தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே மலர்களால் அலங்கரித்து அமைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஐ.பெரியசாமி, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தலைமை கழக செயலாளர் பூச்சி முருகன், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, மயிலை த.வேலு, இளைய அருணா மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    • சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
    • இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகிய அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.

    சென்னை:

    சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளினையொட்டி, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி 3, சனிக்கிழமை காலை 7 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். பேரணியில் இந்நாள்-முன்னாள் அமைச்சர்கள், இந்நாள்-முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகிய அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
    • 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் இன்று அண்ணா நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்குஅ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி. காமராஜ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு சன்சீட்ஸ் ஜவகர் தலைமை தாங்கினார். தண்டபாணி, ஜாபர் சாதிக் ,பாவா, அம்மன் பாலு, மகேஷ் , மைதீன் , செய்யது,சுதாரவிஉட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
    • அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் உறுதிமொழி ஏற்கிறார்.

    சென்னை:

    அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் வரும் பிப்ரவரி 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • அமைதி பேரணி சேப்பாக்கம் வாலாஜா சாலை அண்ணா சிலையில் இருந்து தொடங்கி, அண்ணா நினைவிடத்தில் நிறைவடைகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் வரும் பிப்ரவரி 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க. சார்பில் அமைதி பேரணி 3-ந்தேதி நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் நிர்வாகிகள் அமைதி பேரணியில் பங்கேற்று, காலை 7 மணியளவில் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இந்த அமைதி பேரணி சேப்பாக்கம் வாலாஜா சாலை அண்ணா சிலையில் இருந்து தொடங்கி, அண்ணா நினைவிடத்தில் நிறைவடைகிறது.

    இந்த பேரணியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள், தி.மு.க. மாநில, மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பங்கேற்க சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ×