search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிப்.3 அண்ணா நினைவு நாள்: துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி
    X

    பிப்.3 அண்ணா நினைவு நாள்: துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி

    • சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
    • இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகிய அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.

    சென்னை:

    சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளினையொட்டி, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி 3, சனிக்கிழமை காலை 7 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். பேரணியில் இந்நாள்-முன்னாள் அமைச்சர்கள், இந்நாள்-முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகிய அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    Next Story
    ×