செய்திகள்
பேரணியில் கலந்து கொண்ட தலைவர்கள்.

கூட்டணி கட்சிகளுடன் பேசி மீண்டும் பெரிய போராட்டம்- மு.க.ஸ்டாலின்

Published On 2019-12-23 07:03 GMT   |   Update On 2019-12-23 07:03 GMT
குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக் கோரி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பேரணி நிறைவடைந்ததும் அங்கு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி இன்று அமைதியான முறையில் பேரணி நடைபெற்று முடிந்துள்ளது. ‘இது பேரணி அல்ல போரணி’. இந்த பேரணியை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

கோர்ட்டு அனுமதியுடன் கூட்டணி கட்சிகள் அனைவரும் பங்கேற்று பேரணியை சிறப்பான முறையில் நடத்தி கொடுத்துள்ளனர். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.



இந்த பேரணியை பெரிய அளவில் விளம்பரப்படுத்திய அ.தி.மு.க. அரசுக்கும், பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக் கோரி கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Tags:    

Similar News