செய்திகள்

கோவை அருகே அரசு பள்ளி ஆசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-06-22 04:21 GMT   |   Update On 2019-06-22 04:21 GMT
கோவை அருகே மன அழுத்தம் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

கோவை இடையர்பாளையம் அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் ராம்பிரபு (வயது 45). அரசு பள்ளி ஆசிரியர்.

இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தம் அடைந்து காணப்பட்டார். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவத்தன்று ராம்பிரபு வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். மாலையில் மிகவும் சோர்வடைந்து வீட்டுக்கு திரும்பினார்.

வீட்டில் இருந்த அவர் மன அழுத்தம் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ராம்பிரபுவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராம்பிரபு பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News