செய்திகள்

ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது

Published On 2019-05-29 00:13 GMT   |   Update On 2019-05-29 00:13 GMT
ரவுடி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர் அம்மணிஅம்மன் தோட்டம் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஒத்தவாடை பிரகாஷ். இவருடைய மகன் தினேஷ் (வயது 24). ரவுடியான இவர் மீது கஞ்சா விற்பனை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு மர்மகும்பல் ஒன்று அதே பகுதியில் வைத்து ரவுடி தினேசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இது தொடர்பாக திருவொற்றியூர் உதவி கமிஷனர் வெற்றிச்செழியன் தலைமையில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் தெருவில் பதுங்கி இருந்த மாங்கா சதீஷ் (26), செல்வம் (23), சந்தோஷ்(19), அரி (19), பிரவீன் (20), மகேஷ் (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் கொலையான தினேசுக்கும், கைதான மாங்கா சதீசுக்கும் யார் பெரிய ரவுடி? என போட்டி இருந்து உள்ளது. இதனால் தினேஷ், மாங்கா சதீசை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், இதை அறிந்த மாங்கா சதீஷ் முந்திக்கொண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேசை வெட்டிக்கொலை செய்ததும் தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News