செய்திகள்

பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வியாபாரி

Published On 2019-03-03 11:52 GMT   |   Update On 2019-03-03 11:52 GMT
பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த உப்பு வியாபாரி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தேனி:

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 57). உப்பு வியாபாரி. இவர் வீட்டு அருகே வசித்து வரும் 10 வயது சிறுமியை அடிக்கடி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டி வந்துள்ளார். சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் விசாரித்த போது சிறுமி உப்பு வியாபாரி தன்னிடம் நடந்து கொண்டது பற்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News