search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமிக்கு பாலியல் தொல்லை"

    • கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சிவனாங்கிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருேக உள்ள அத்தக்கல்லை சேர்ந்தவர் சிவனாங்கி (வயது30). விவசாயி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் சிவனாங்கியை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சிவனாங்கிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.

    • தாய் புகார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு திமிரி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி. இவர் கடந்த 10-ந் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதைப் பார்த்த மற்றொரு மாணவி இது குறித்து ஆசிரியையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய மாணவி மீட்கப்பட்டார்.

    இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 60 வயது முதியவர் நைசாகி பேசி சிறுமியை அவரது வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • சிறுமி அழுது கொண்டு வீட்டிற்கு வந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியை விசாரித் தனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் மனநலம் பாதிக்கப் பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 10-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்ற 60 வயது முதியவர் நைசாகி பேசி சிறுமியை அவரது வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் சிறுமி அழுது கொண்டு வீட்டிற்கு வந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியை விசாரித் தனர்.அப்போது சிறுமி நடந்ததை கூறினார்.

    உடனடியாக சிறுமியின் தாய் மாரண்ட அள்ளி போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • சலூன் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • தனியார் பள்ளில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.

    கோவை

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், 3¾ வயதில் ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். சம்பவத்தன்று நான் எனது மகன், மகளுக்கு முடி வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்து சென்றேன். அங்கு கிணத்துக்கடவு லட்சுமி நகரை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மணிகண்டன் (வயது 53) என்பவர் முடி வெட்டிக்கொண்டு இருந்தார்.

    முதலில் எனது மகனுக்கு முடி வெட்டினார். பின்னர் எனது மகளுக்கு மணிகண்டன் முடி வெட்டினார். அப்போது நான் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றேன். அப்போது மணிகண்டன் எனது மகளுக்கு தொல்லை கொடுத்தார். நான் திரும்பி வந்து பார்த்த போது எனது மகள் அழுது கொண்டு இருந்தாள். நான் என்ன என்று கேட்டபோது மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறினார். எனவே எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் முடி வெட்ட சென்ற 3¾ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24.11.2019 அன்று அந்த சிறுமிக்கு தமிழ் எழுத்து பயிற்சி சொல்லி கொடுப்பதாக பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறைக்கு, அப்பள்ளியின் தாளாளரான குருதத் (வயது 61) என்பவர் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தை, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தில், குருதத்தை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு வழங்கினார்.

    அந்த தீர்ப்பில், சிறுமியை அறையில் அடைத்து வைத்த குற்றத்திற்காக தாளாளர் குருதத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார். 

    • இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • சிறுமியை 2-வது தந்தையின் நண்பரான ஜீவானந்தம் என்பவர் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

    கோவை

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருணமாகி விட்டது. இவருக்கு 10 வயதில் மகளும் உள்ளார்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்தார். பின்னர் 2-வதாக வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

    சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமியை 2-வது தந்தையின் நண்பரான ஜீவானந்தம் என்பவர் வீட்டிற்கு வருமாறு அழைத்தார். தந்தையின் நண்பர் என்பதாலும் சிறுமியும் சென்றார்.

    அப்போது அங்கு வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியான சிறுமி, அவரிடம் இருந்து தப்பி நேராக வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் தனக்கு நடந்த சம்பவங்களை தாயிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியான அவர், குழந்தையை நேராக அழைத்து கொண்டு ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீவானந்தம் ஒரு வருடமாக சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்து. இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    ×