என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-ம் வகுப்பு சிறுமிக்கு 9-ம் வகுப்பு மாணவர் பாலியல் தொல்லை
    X

    4-ம் வகுப்பு சிறுமிக்கு 9-ம் வகுப்பு மாணவர் பாலியல் தொல்லை

    • தாய் புகார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு திமிரி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி. இவர் கடந்த 10-ந் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதைப் பார்த்த மற்றொரு மாணவி இது குறித்து ஆசிரியையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய மாணவி மீட்கப்பட்டார்.

    இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×