search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvananthapuram girl harassment"

    திருவனந்தபுரம் அருகே அரசு அலுவலகத்தில் வைத்து 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையை அடுத்துள்ளது பாலிக்கல்.

    இங்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அதிகாரியாக விஜயகுமார் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அந்த அலுவலகத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் விபரீத எண்ணம் கொண்ட விஜயகுமார் அந்த சிறுமியை ஏமாற்றி அலுவலகத்திற்கு அழைத்து அவருக்கு முத்த மழை பொழிந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    அப்போது அந்த அலுவலகத்தில் வேறு யாரும் இல்லாததால் அந்த சிறுமிக்கு உதவி கிடைக்கவில்லை. அதன்பிறகு அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி நடந்த கொடுமையை கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அலுவலகத்திற்கு அதிகாரியை தேடிச் சென்ற போது அவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டது தெரிய வந்தது.

    உடனே அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அதிகாரி விஜயகுமார் கைது செய்யப்பட்டார். அவர்மீது போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×