செய்திகள்
கஜா புயல் நிவாரண நிதி குறித்து 2 வாரத்தில் முடிவு செய்யப்படும் - மத்திய அரசு தகவல்
கஜா புயல் நிவாரண நிதி குறித்து 2 வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #GajaCyclone #ReliefFund
மதுரை:
மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், தஞ்சை பேராவூரணியைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழு தனது இறுதி அறிக்கையை எப்போது தாக்கல் செய்யும் என கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் வாதாடும்போது, மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியில் போதுமான பணம் இருப்பு உள்ளது.
இருப்பினும் கஜா புயல் நிவாரணத்திற்காக தமிழகத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றார்.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு வக்கீல் வாதாடும்போது, மத்திய குழு அளித்த இறுதி அறிக்கை அடிப்படையில் தான் நிவாரண நிதி ஒதுக்க முடியும். அதற்காக தான் தமிழக அரசிடம் கூடுதல் விவரம் கேட்கப்படுகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக எப்போது முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆதிகேசவலு, சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ. 1,277.62 கோடியை கஜா புயல் நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு செலவு செய்து கொள்ளலாம்.
மத்திய குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும். அதன் பேரில் மத்திய அரசு நிவாரண நிதி வழங்குவது பற்றி 2 வாரத்தில் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #GajaCyclone #ReliefFund
மதுரை மேலூரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், தஞ்சை பேராவூரணியைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், “கஜா” புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்க வேண்டும், புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய குழு தனது இறுதி அறிக்கையை எப்போது தாக்கல் செய்யும் என கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் வாதாடும்போது, மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியில் போதுமான பணம் இருப்பு உள்ளது.
இருப்பினும் கஜா புயல் நிவாரணத்திற்காக தமிழகத்திற்கு போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றார்.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு வக்கீல் வாதாடும்போது, மத்திய குழு அளித்த இறுதி அறிக்கை அடிப்படையில் தான் நிவாரண நிதி ஒதுக்க முடியும். அதற்காக தான் தமிழக அரசிடம் கூடுதல் விவரம் கேட்கப்படுகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக எப்போது முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆதிகேசவலு, சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ. 1,277.62 கோடியை கஜா புயல் நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு செலவு செய்து கொள்ளலாம்.
மத்திய குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும். அதன் பேரில் மத்திய அரசு நிவாரண நிதி வழங்குவது பற்றி 2 வாரத்தில் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #GajaCyclone #ReliefFund