செய்திகள்
சுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு
டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஊராட்சி செயலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 46) இவர் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். இதே ஊராட்சியில் முருகன், அவரது மனைவி காளியம்மாள்(31) ஆகியோர் டெங்கு ஓழிப்பு மஸ்தூர் கள பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் அலுவலகத்திற்கு கையெழுத்திட வரும்போது காளியம்மாளிடம் ஊராட்சி செயலர் வைத்தியலிங்கம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பணியாளர்கள் அனைவரும் சென்ற பின்னர் அலுவலக அறையில் வைத்தியலிங்கம் காளியம்மாளை பலாத்காரம் செய்ய முயற்சித்தாராம். காளியம்மாள் சத்தமிடமே வெளியே சென்றிருந்த முருகன் வந்துள்ளார். பின்னர் அவர்களுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு வைத்திலிங்கம் சென்று விட்டார்.
இது குறித்து காளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சுரண்டை சப்- இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து வைத்திலிங்கத்தை தேடி வருகிறார்கள்.