செய்திகள்
எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி வற்புறுத்தல்
எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். #HRaja #BJP
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக காவல்துறையினரைக் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் அடா வடித்தனமாகப் பேசியிருப்பதுடன் உயர்நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன் படுத்தியுள்ளார். காணொலி ஆதாரத்துடன் இவை வெளியாகியுள்ளன. தமிழகத்தின் அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் எச்.ராஜா மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். #HRaja #BJP