செய்திகள்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்போம் - வைகோ

Published On 2018-08-29 09:12 GMT   |   Update On 2018-08-29 09:12 GMT
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளரை ம.தி.மு.க. ஆதரிக்கும் என்று வைகோ கூறினார்.
மதுரை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் ம.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு அமோக வெற்றி பெறும்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு மனப்பூர்வமான மகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்தேன். எங்கள் கூட்டணியின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளரை ம.தி.மு.க. ஆதரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநகர் மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன், கவுரிசங்கர், கீரைத்துறை பாண்டியன் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News