செய்திகள்

பாசனத்துக்காக மேட்டூர் அணை தண்ணீர் ஜூன் 12-ந்தேதி திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2018-05-19 08:32 GMT   |   Update On 2018-05-19 08:32 GMT
பாசனத்துக்காக மேட்டூர் அணை தண்ணீர் ஜூன் 12-ந்தேதி திறக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைத்தால் தான் தமிழகத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு இருக்காது. குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் தான் டெல்டா மாவட்டப் பகுதியில் விவசாயம் நடைபெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.

கடந்த பல வருடங்களாக காவிரி நதிநீர் தமிழகத்துக்கு முறையாக காலத்தே கிடைக்காததால் தமிழகத்தில் பல லட்சக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களில் விவசாயம் நடைபெறாமல் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணையைத் தவறாமல் காலத்தே திறந்து தமிழக விவசாயிகளும், பொது மக்களும் பயன்பெற வேண்டும் என்பதில் ஆளும் ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #GKVasan #Tamilmaanilacongress
Tags:    

Similar News