செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.5½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.5½ லட்சம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மேலும் முகமது பாரூக் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்:
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது பாரூக் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர் பையில் ரூ.5.49 லட்சம் மதிப்புள்ள 175 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் முகமது பாரூக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். தற்போது பயணி ஒருவரிடம் ரூ.5.49 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது பாரூக் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர் பையில் ரூ.5.49 லட்சம் மதிப்புள்ள 175 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் முகமது பாரூக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். தற்போது பயணி ஒருவரிடம் ரூ.5.49 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.