செய்திகள்
மேட்டூர் அருகே ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை
மேட்டூர் அருகே இன்று காலை வாலிபர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பீதி நிலவியது. பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குள்ளவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 22).
இவர் இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் சென்ற நிலையில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இவரை வழிமறித்தனர்.
இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிப் பார்த்தார். என்றாலும் அந்த 2 பேரும் விடாமல் துரத்தி சென்றனர். பின்னர் இவர் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி ஓடினார். இவரை ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கண்ணன் ஒரு வீட்டிற்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டார். அவரை கொல்ல வந்த 2 பேரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அவரை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அரிவாளாலும் வெட்டினார்கள்.
வீட்டிற்கு வெளியே வந்த அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் அந்த 2 பேரும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பீதி நிலவியது. பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மேட்டூர் டி.எஸ்.பி. சவுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் கண்ணன் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. பெண் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குள்ளவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 22).
இவர் இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் சென்ற நிலையில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இவரை வழிமறித்தனர்.
இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிப் பார்த்தார். என்றாலும் அந்த 2 பேரும் விடாமல் துரத்தி சென்றனர். பின்னர் இவர் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி ஓடினார். இவரை ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கண்ணன் ஒரு வீட்டிற்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டார். அவரை கொல்ல வந்த 2 பேரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அவரை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அரிவாளாலும் வெட்டினார்கள்.
வீட்டிற்கு வெளியே வந்த அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் அந்த 2 பேரும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பீதி நிலவியது. பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மேட்டூர் டி.எஸ்.பி. சவுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் கண்ணன் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. பெண் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews