செய்திகள்
சேவகமூர்த்தி

பல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலி

Published On 2018-02-20 04:29 GMT   |   Update On 2018-02-20 04:29 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் ஹாஸ்டல் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி முத்து மீனா. இவர்களது மகன் சேவக மூர்த்தி (12). இவர் பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 11-ந்தேதி மாணவர் சேவகமூர்த்திக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவர் ரத்தத்தை பரிசோதனை செய்த போது டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலியான சம்பவம் வடுகபாளையம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News