செய்திகள்

வேறொரு பெண்ணுடன் தொடர்பு: இன்று நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்திய பெண்

Published On 2018-01-22 08:02 GMT   |   Update On 2018-01-22 08:02 GMT
மதுரையில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் இன்று நடைபெற இருந்த திருமணத்தை மணமகள் நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் விஷ்ணுபெருமாள் (வயது30). இவருக்கும், மதுரை விளாங்குடியை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவருக்கும் இன்று (22-ந்தேதி) மதுரையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான விடுதியில் விஷ்ணுபெருமாள், அவரது சகோதரர் சதீஷ்பெருமாள் மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் மணப்பெண்ணின் சகோதரர் மாரிராஜ்குமாருக்கு (30) வாட்ஸ்-அப்பில் ஒரு படம் வந்தது. அதில் உங்கள் சகோதரி திருமணம் செய்ய இருக்கும் விஷ்ணு பெருமாளுக்கும், வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியதுடன் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற படமும் இடம் பெற்றிருந்தது.

இதைப்பார்த்த மாரி ராஜ்குமார் ஆத்திரம் அடைந்தார். அவர் தனது உறவினர்கள் பிரசாந்த், சதீஷ்குமார், மகேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்த விஷ்ணுபெருமாளையும், அவரது சகோதரர் சதீஷ் பெருமாளையும் அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து விஷ்ணு பெருமாள் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீ சில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மணப்பெண்ணின் சகோதரர் மாரிராஜ்குமார், உறவினர்கள் பிரசாந்த், சதீஷ்குமார், மகேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்றது. #Tamilnews
Tags:    

Similar News