செய்திகள்

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் குத்துச்சண்டை போட்டியில் கேரள ராணுவ வீரர் மரணம்

Published On 2017-12-13 05:20 GMT   |   Update On 2017-12-13 05:20 GMT
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் குத்துச்சண்டை போட்டியின் போது தலையில் பலத்த காயமடைந்து கேரள ராணுவ வீரர் பலியானார்.
சென்னை:

கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் ரோனி ஜக்காரியா (வயது 25). கடந்த மாதம் ராணுவத்தில் சேர்ந்த இவர் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் பயிற்சிக்காக நடந்த குத்துச் சண்டை போட்டியில் ரோனி ஜக்காரியா பங்கேற்றார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோனி ஜக்காரியா இறந்தார்.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ராணுவ பயிற்சி மையத்தில் நடந்த குத்துச் சண்டை பயிற்சியின்போது ரோனி ஜக்காரியா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரோனி ஜக்காரியா உயிரிழந்தார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News