செய்திகள்

இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Published On 2017-11-19 10:05 GMT   |   Update On 2017-11-19 10:05 GMT
இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி கூறியுள்ளார்.

சென்னை:

சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டி உள்ள இலங்கை அருகே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

தூத்துக்குடியில் 3 செ.மீ., விருதுநகர் 2 செ.மீ., கேளம் பாக்கத்தில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம்-புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News