செய்திகள்
தண்டையார்பேட்டையில் ரவுடி கல்வெட்டு ரவி கூட்டாளி கொலை
தண்டையார்பேட்டையில் ரவுடி கல்வெட்டு ரவியின் கூட்டாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை, திலகர் நகர், குடிசை மாற்று வாரியம், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ஜீவா (வயது 32). ரவுடி.
இவர் மீது தி.மு.க. வட்ட செயலாளர் ஒத்தவாடை சண்முகம் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் நெருங்கிய கூட்டாளியாக ஜீவா இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே ஜீவா நின்று கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கும்பல், கத்தி, அரிவாளுடன் அங்கு வந்தனர்.
அவர்கள் திடீரென ஜீவாவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய ஜீவாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
கொலையுண்ட ஜீவா, கடந்த சில மாதங்களாக குற்றச் செயல்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
எனவே ஜீவாவால் பாதிக்கப்பட்ட பழைய குற்றவாளிகள் யாரேனும் அவரை தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் ஜீவாவின் நண்பர்களுக்கும் வேறு சிலருக்கும் மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் கொலை நடந்ததா? என்றும் தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்டையார்பேட்டை, திலகர் நகர், குடிசை மாற்று வாரியம், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ஜீவா (வயது 32). ரவுடி.
இவர் மீது தி.மு.க. வட்ட செயலாளர் ஒத்தவாடை சண்முகம் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் நெருங்கிய கூட்டாளியாக ஜீவா இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே ஜீவா நின்று கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கும்பல், கத்தி, அரிவாளுடன் அங்கு வந்தனர்.
அவர்கள் திடீரென ஜீவாவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய ஜீவாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
கொலையுண்ட ஜீவா, கடந்த சில மாதங்களாக குற்றச் செயல்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
எனவே ஜீவாவால் பாதிக்கப்பட்ட பழைய குற்றவாளிகள் யாரேனும் அவரை தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் ஜீவாவின் நண்பர்களுக்கும் வேறு சிலருக்கும் மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் கொலை நடந்ததா? என்றும் தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.