செய்திகள்

ராமநாதபுரம்-மதுரையில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி

Published On 2017-10-20 05:28 GMT   |   Update On 2017-10-20 05:28 GMT
ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே உள்ள காரைக்குடியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது21).

இவர் காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம். படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா காய்ச்சலால் அவதிப்பட்டார். உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நடைபெற்ற ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.

எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் கோமதியாபுரத்தைச் சேர்ந்தவர் காசிவிசுவநாதன் (48). சவரத்தொழிலாளியான இவருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காசிவிசுவநாதன் பரிதாபமாக இறந்தார்.

மதுரையை அடுத்த சமயநல்லூர் தோடனேரியைச் சேர்ந்தவர் ஆர்த்திகா (26). டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆர்த்திகா பரிதாபமாக இறந்தார்.
Tags:    

Similar News