செய்திகள்
தர்மபுரியில் குடும்ப தகராறில் பெண் போலீஸ் மண்டை உடைப்பு
தர்மபுரியில் இன்று காலை குடும்ப தகராறில் பெண் போலீசை அவரது கணவர் தாக்கியதில் மண்டை உடைந்தது.
தர்மபுரி:
தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருபவர் வீரமணி (வயது 31). இவர் தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி பிரேமா (34). இவர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீப காலமாக குடும்ப பிரச்சனை காரணமாக இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலை அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த வீரமணி, பிரேமாவை சரமாரியாக தாக்கினார். இதில் பிரேமாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் குடியிருக்கும் போலீசார் அங்கு ஓடி சென்றனர். அப்போது தலையில் இருந்து ரத்தம் வடிந்த படி பிரமோ தரையில் கிடந்தார். இதை பார்த்த அவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் வீரமணி தாக்கியதில் பிரேமாவின் தலையில் உள்ள நரம்பு துண்டிக்கப்பட்டதால் தலையில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி உள்ளது. தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீரமணியை போலீசார் தேடிய போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை தேடி வரும் போலீசார் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருபவர் வீரமணி (வயது 31). இவர் தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி பிரேமா (34). இவர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீப காலமாக குடும்ப பிரச்சனை காரணமாக இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலை அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த வீரமணி, பிரேமாவை சரமாரியாக தாக்கினார். இதில் பிரேமாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் குடியிருக்கும் போலீசார் அங்கு ஓடி சென்றனர். அப்போது தலையில் இருந்து ரத்தம் வடிந்த படி பிரமோ தரையில் கிடந்தார். இதை பார்த்த அவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் வீரமணி தாக்கியதில் பிரேமாவின் தலையில் உள்ள நரம்பு துண்டிக்கப்பட்டதால் தலையில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி உள்ளது. தொடர்ந்து ரத்தம் வெளியேறியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீரமணியை போலீசார் தேடிய போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை தேடி வரும் போலீசார் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.