செய்திகள்
கணவர் தற்கொலை செய்துகொண்டதால் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை
கணவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் குழந்தையை கொலை செய்து விட்டு இளம்பெண் தூக்கில் தொங்கி இறந்தார்.
வேலூர்:
காட்பாடி செங்குட்டையை சேர்ந்தவர் ரெக்ஸ். இவருடைய மனைவி ரூத்கிறிஷ்டியானா (28) இவர்களுக்கு பால் என்ற 1 வயது ஆண் குழந்தை இருந்தது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் இவர்கள் செங்குட்டையில் குடியேறினர். ரெக்ஸ்க்கு வேலை இல்லாததால் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரெக்ஸ் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவல் ரூத் கிறிஸ்டியானாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டதும் அவர் மனம் உடைந்தார். இரவில் தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை கிறிஸ்டியானா பிணமாக தொங்கியதை கண்ட அக்கம் பக்கத்தினர் காட்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிறிஸ்டியானா, மற்றும் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெக்ஸ், கிறிஸ்டியானா ஒரு மாதத்துக்கு முன்புதான் இங்கு குடியேறியதால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ரெக்ஸ் என்ன வேலை செய்தார். எதற்காக மதுரை சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி செங்குட்டையை சேர்ந்தவர் ரெக்ஸ். இவருடைய மனைவி ரூத்கிறிஷ்டியானா (28) இவர்களுக்கு பால் என்ற 1 வயது ஆண் குழந்தை இருந்தது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் இவர்கள் செங்குட்டையில் குடியேறினர். ரெக்ஸ்க்கு வேலை இல்லாததால் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரெக்ஸ் மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவல் ரூத் கிறிஸ்டியானாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டதும் அவர் மனம் உடைந்தார். இரவில் தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை கிறிஸ்டியானா பிணமாக தொங்கியதை கண்ட அக்கம் பக்கத்தினர் காட்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிறிஸ்டியானா, மற்றும் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெக்ஸ், கிறிஸ்டியானா ஒரு மாதத்துக்கு முன்புதான் இங்கு குடியேறியதால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ரெக்ஸ் என்ன வேலை செய்தார். எதற்காக மதுரை சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.