செய்திகள்

மதுரையில் சுவர் இடிந்து விழுந்தது: மதுபார் ஊழியர்கள் 2 பேர் பரிதாப பலி

Published On 2017-09-21 10:23 GMT   |   Update On 2017-09-21 10:24 GMT
சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மதுபார் ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மதுரை:

மதுரை அண்ணாநகர் குருவிக்காரன் சாலையில் வைகை ஆற்றின் கரையோரம் தனியார் மதுபானக் கூடம் செயல்பட்டு வந்தது. இங்கு மேலாளராக பணியாற்றியவர் ரவீந்திரன் (வயது 52). துணை மேலாளராக இருந்தவர் ஜெயக்குமார் (50).

ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த மதுபானக்கூடம் சமீபத்தில் மூடப்பட்டது. இருப்பினும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள், மதுபானக்கூடத்தில் சில பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர்.

பணியில் ஈடுபட்ட ரவீந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை மதுபானக் கூடத்தின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப்பகுதியில் புல்டோசர் மூலம் சிலர் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகளை அகற்றினர்.

இந்தப்பணியின் போது புல்டோசர் எதிர்பாராத விதமாக ரவீந்திரன் மற்றும் ஜெயக்குமார் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே உள்ள சுவற்றில் இடிந்தது.. இதனால் அந்த ‘ஹாலோ பிளாக்’ சுவர் இடிந்து நொறுங்கியது. அதன் இடிபாடுகளுக்குள் ரவீந்திரனும், ஜெயக்குமாரும் சிக்கிக் கொண்டனர்.

இதனைக் கண்ட அக்கம், பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றி 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ரவீந்திரன் மற்றும் ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News