search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wall collapsed"

    • சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர்.
    • இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அர்ஜுன் நகர் பகுதியில் சிலர் வழக்கம்போல சுற்றுச்சுவர் அருகில் நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து அவர்கள்மீது விழுந்தது.

    சுற்றுச்சுவர் இடிபாடுகளுக்குள் 4 பேர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு, இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தச் சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. . இவர் இன்று காலை 8 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள முத்துக்கருப்பன் என்பவரது வீட்டின் சந்தில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது தொடர் மழை காரணமாக முத்துக் கருப்பனின் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.

    இது குறித்து கால் முறிவு ஏற்பட்ட பெரியசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

    ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக சாலைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    ராமநாதபுரம் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த தொழிலாளி அங்குசாமி என்பவரது வீட்டுச்சுவர் மழையால் இடிந்து விழுந்தது.

    அப்போது வீட்டிற்குள் படுத்திருந்த அங்குசாமியின் மனைவி ரெத்தினம் அம்மாள் (வயது 75) மீது சுவர் விழுந்தது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்ததும் ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளிலும் வீட்டின் அருகிலும் மழைநீர் தேங்கி உள்ளது. போர்கால நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தண்ணீரை குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    ராஜபாளையத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, சுவர் இடிந்து இருவர் சிக்கினர். ஒரு மணி நேரம் போராடி இருவரும் மீட்கப்பட்டனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் துரைச்சாமிபுரம் காட்டுத் தெருவைச் சேர்ந்த ராமர் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் அருகே மாரியம்மாள் என்பவரது பழைய ஓட்டு வீடு உள்ளது. புதிய வீட்டிற்காக தொழிலாளர்கள் அருகில் உள்ள மாரியம்மாள் வீட்டின் முன் நின்று பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாரியம்மாள் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் முனியாண்டி (வயது 30), வேலுராஜ் (42) ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்க முயற்சித்தனர். முடியாததால் காவல் துறை மற்றும் தீ அணைப்பு நிலையத்தினருக்கு தகவல் அளித்தனர்.

    தகவல் அறிந்து வந்த தீ அணைப்பு நிலையத்தினர் மற்றும் தெற்கு காவல் நிலையத்தினர் இடி பாடுகளில் சிக்கியிருந்த முனியாண்டியை முதலில் காயங்களுடன் மீட்டனர். வேலுராஜ் இடது கால் மீது மண்சுவர் இடிந்து விழுந்ததால் அவரை உடனடியாக மீட்க முடிய வில்லை.

    கயிறு மூலம் இடிந்த சுவற்றைக் கட்டி தீ அணைப்பு நிலையத்தினரும், காவல் துறையினரும் ஒரு மணி நேரம் போராடி மண் சுவரை அகற்றி மீட்டனர். வேல்ராஜை மருத்துவமனை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரமாக வராததால், ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் டி.பி. மில்ஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கோட்டக்குப்பம் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்னமுதலியார் சாவடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி லட்சுமி (வயது 65). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் முத்து வீட்டில் லட்சுமி வசித்து வருகிறார்.

    முத்து தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டுவதற்கு வீட்டை பிரித்தார். சுவர் மட்டும் இடிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் லட்சுமி வெற்றிலை பாக்கு வாங்குவதற்கு கடைக்கு சென்றார். அதனை வாங்கி விட்டு வீடு திரும்பிய போது, நேற்று பெய்த கனமழையினால் பழைய வீட்டின் சுவர் இடிந்து லட்சுமியின் மீது விழுந்தது.

    லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர் மீது கிடந்த செங்கற்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி பார்த்த போது பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வானூர் தாசில்தார் ஜோதிமணிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வருவாய்துறை ஆய்வாளர் இன்று காலை நேரில் வந்து பார்வையிட்டார்.



    மெலட்டூர் அருகே புயல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். தகவல் அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு வீட்டிற்கு சென்று உறவினருக்கு ஆறுதல் கூறினார்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணுகுடி தோட்டம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னையன் இவரது மனைவி சாரதாம்பாள் (வயது 70) நேற்று இரவு தனது குடிசை வீட்டில் உறங்கி கொண்டிருந்த அவர் மீது புயல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சாரதாம்பாள் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர். பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், துணை தாசில்தார் தர்மராஜ். மெலட்டூர் சரக வருவாய் ஆய்வாளர் கலையரசி உள்பட வருவாய் துறையினர் உடன் சென்றனர்.

    கடலூர் மத்திய சிறையில் சுவர் இடிந்து விழுந்ததில் கைதியின் கால் முறிந்தது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலையில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மதுரையை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பவர் விசாரணை கைதியாக இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    அதேபோல் சென்னையை சேர்ந்த ரூபன் என்பவர் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். ரூபனும், சுரேசும் அடுத்தடுத்த அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலை சுரேஷ் அங்குள்ள தடுப்புச்சுவரை பிடித்துக் கொண்டு அடுத்த அறையில் உள்ள ரூபனிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் சுரேசுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அவர் கூச்சலிட்டார்.

    உடனே சிறை காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். சுரேசை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    பொம்மிடியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லாரி டிரைவர் மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் நேற்று மாலை கருமேகத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது.

    பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன் (வயது50). லாரி டிரைவர். நேற்று இரவு வீட்டின் அருகே பலத்த மழை பெய்ததால் அங்கப்பன் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

    மழை பெய்து கொண்டிருந்ததால் இரவு 9 மணியளவில் வீட்டிற்குள் உறங்க சென்றார். அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள குடிசை வீட்டில் அவரது மனைவி தூங்கி கொண்டிருந்தார்.

    அங்கப்பன் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த அங்கப்பன் மீது விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவர் வலியால் அலறினார். சுவர் இடிந்த சத்தம் கேட்டதும் அங்கப்பனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவரை மீட்டனர்.

    பலத்த காயம் அடைந்த அங்கப்பனை உடனே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×