என் மலர்
இந்தியா

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பரிதாப பலி: வைரலாகும் வீடியோ
- சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர்.
- இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சண்டிகர்:
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அர்ஜுன் நகர் பகுதியில் சிலர் வழக்கம்போல சுற்றுச்சுவர் அருகில் நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து அவர்கள்மீது விழுந்தது.
சுற்றுச்சுவர் இடிபாடுகளுக்குள் 4 பேர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு, இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
#WATCH | Haryana: Four people, including a child, died when the walls of a crematorium collapsed on them in Arjun Nagar, Gurugram today. Their postmortem is being done. Police investigation is underway and further action will be taken. pic.twitter.com/5ezomHRd3K
— ANI (@ANI) April 20, 2024






