என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lorry driver death"
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 45). லாரி டிரைவர். சொந்தமாக லாரி வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் அந்த லாரியில் வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு வீராணம் ஏரிக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின் வயர் வைக்கோலில் பட்டு தீப்பிடித்தது.
இந்த சம்பவத்தில் அண்ணாதுரைக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டு தெற்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
வடகரை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் சென்றபோது திடீரென ஒரு நாய் குறுக்கே சென்றது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.
கீழே விழுந்த முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல்நிலை மோசமானதால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இரணியல்:
இரணியல் அருகே தலக்குளம் குலாலர் தெருவைச் சேர்ந்தவர் சேகர், (வயது 35), லாரி டிரைவர். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்றிரவு இவர்கள் வழக்கம்போல் தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை சுனிதா கண் விழித்தார். வீட்டின் பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் பின்புறம் துணியை உலர வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கயிற்றின் மீது சுனிதாவின் கை பட்டது.
அந்த கயிற்றில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் சுனிதா தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து சேகர் ஓடி வந்தார். மின்சாரம் தாக்கிய மனைவி சுனிதாவை காப்பாற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக சேகர், அதே கயிற்றின் மீது தவறி விழுந்தார்.
இதில் அவரது மீதும் மின்சாரம் பாய்ந்தது. கணவன், மனைவி இருவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.உடனடியாக அந்த பகுதியினர் மின் இணைப்பை துண்டித்தனர். அதற்குள் சேகர் பரிதாபமாக இறந்தார்.
கணவரின் உடலை பார்த்து சுனிதா கதறி அழுதார். சேகர் பலியானது குறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை காப்பாற்ற முயன்றபோது கணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாயவன் (வயது 47). லாரி டிரைவர். இவர் பரமத்திவேலூர் லாரி அசோசியேசன் பெட்ரோல் பங்க்கில் டீசல் அடைத்து விட்டு லாரியை எடுக்க முயன்றார். அப்போது திடீரென மாயவன் மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அகரசோழதரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 42). லாரிடிரைவர். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சோழதரம் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜா தூக்கிவீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சோழதரம் போலீசார் விரைந்து சென்று விபத்தில் இறந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த ராஜாவுக்கு அம்சவேணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். #tamilnews
சாமியார்மடத்தை அடுத்த வியனூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது.
ராஜேசுக்கு சொந்தமான லாரியில் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த சேகர் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். லாரியில் நேற்று ரப்பர் மரத்தடிகள் ஏற்றப்பட்டன.இதனை நெல்லை மாவட்டம் அம்பாச முத்திரம் பகுதிக்கு கொண்டு செல்லும்படி டிரைவர் சேகரிடம், லாரி உரிமையாளர் ராஜேஷ் தெரிவித்தார்.
இதையடுத்து சேகர், மரத்தடிகள் ஏற்றிய லாரியுடன் வியனூரில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு புறப்பட்டார்.
தக்கலை-இரணியல் ரோட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் லாரி சென்றது. ஆழ்வார்கோவில் அரசமூட்டு குளம் அருகே வந்தபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறு மாறாக ஓடியது.
இதில், சாலையின் திருப்பத்தில் இருந்த குளத்திற்குள் லாரி தலை குப்புற கவிழ்ந்தது.
அதிகாலையில் லாரி குளத்திற்குள் கவிழ்ந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி இரணியல் போலீசாருக்கும், தக்கலை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து குளத்திற்குள் கவிழ்ந்த லாரியை மீட்க முயன்றனர்.
லாரியில் மரத்தடிகள் இருந்ததால் அதனை உடனடியாக மீட்க முடியவில்லை. இதையடுத்து ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் லாரி மீட்கப்பட்டது. அப்போதுலாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் சேகர் நீரில் மூழ்கி பலியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரி குளத்தில் கவிழ்ந்ததும் அதில் இருந்த மரத்தடிகள் குளத்திற்குள் விழுந்தபோது டிரைவர் சேகர், அதன் இடையே சிக்கி கொண்டதும் இதனால் அவர் குளத்தில் மூழ்கி பலியாகி இருப்பதும் தெரிய வந்தது.
இதற்கிடையே லாரி குளத்தில் கவிழ்ந்த தகவல் அறிந்து லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் சேகரின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணமாக மீட்கப்பட்ட சேகரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு கூடியிருந்தோர் மனதை உருக்குவதாக இருந்தது.
பார்வதிபுரம் மேம்பால பணி காரணமாக மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இப்போது தக்கலை- இரணியல் சாலை வழியாக ஆசாரிபள்ளம் சென்று வருகிறது. இதனால் தக்கலை-இரணியல் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும். இன்று அதிகாலையில் இச்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து போலீசார் இச்சாலையில் வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். #tamilnews
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் நேற்று மாலை கருமேகத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது.
பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன் (வயது50). லாரி டிரைவர். நேற்று இரவு வீட்டின் அருகே பலத்த மழை பெய்ததால் அங்கப்பன் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
மழை பெய்து கொண்டிருந்ததால் இரவு 9 மணியளவில் வீட்டிற்குள் உறங்க சென்றார். அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள குடிசை வீட்டில் அவரது மனைவி தூங்கி கொண்டிருந்தார்.
அங்கப்பன் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த அங்கப்பன் மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவர் வலியால் அலறினார். சுவர் இடிந்த சத்தம் கேட்டதும் அங்கப்பனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அவரை மீட்டனர்.
பலத்த காயம் அடைந்த அங்கப்பனை உடனே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்